/* */

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு சென்னிமலை சாலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் விடிய விடிய மழை:சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்.

ஈரோடு மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது. குறிப்பாக இன்று அதிகாலை 3:30 மணி முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரயில்வே பணிமனை அருகே உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சென்னிமலை ரோட்டில் விழுந்தது. அந்தச் சுற்று சுவரில் ஏற்கனவே கழிவு ஆயில் சூழ்ந்திருந்தது.

இடிந்த சுவற்றில் இருந்த கழிவு ஆயிலுடன் மழை நீரும் சேர்ந்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்து சீர் செய்தனர். இதனையடுத்து இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Aug 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’