/* */

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு

பூர்வீக சொத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு.

HIGHLIGHTS

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு
X

ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த நடராஜன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் (58) என்பவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உறவினருடன் ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். மூன்று வருடத்திற்கு முன்பு நான் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் படுத்த படுக்கையாக உள்ளேன். எங்கள் குடும்பத்திற்கு பூர்விகமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் பங்கு உள்ளது. ஆனால் எனது பங்கை என் அண்ணன் தர மறுத்து வருகிறார். தற்போது என் மனைவியும் மகனும் என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். நான் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என் தாய் தான் என்னைக் கவனித்து வருகிறார். எனக்கு உரிய பங்கை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் மிகவும் கஷ்டப்படுகிறார்.எனவே என்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் எனக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...