/* */

'சதம்' தொடும் பெட்ரோல் விலை: வதைபடும் வாகன ஓட்டிகள்

ஈரோட்டில் பெட்ரோல் விலை 25 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.99.22-க்கு விற்பனையாகி வரும் சூழலில், விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சதம் தொடும் பெட்ரோல் விலை: வதைபடும் வாகன ஓட்டிகள்
X

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதன் பின்னர், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 தாண்டியது. தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.97 - க்கு விற்பனையானது. ஆனால் இன்று 25 பைசா அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100 -ஐ நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல் ஒரு லிட்டர் டீசல் நேற்று ரூ.93.16-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 25 பைசா அதிகரித்து ரூ.93.41-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 22 Jun 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!