/* */

மருத்துவமனை பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி ஈரோட்டில் ஐஎம்ஏ ஆர்ப்பாட்டம்

தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி, இந்திய மருத்துவச்சங்கத்தினர், கருப்பு பட்டை அணிந்து ஈரோட்டில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மருத்துவமனை பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி ஈரோட்டில் ஐஎம்ஏ ஆர்ப்பாட்டம்
X

ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், அதிகளவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான சூழலில் பொதுமக்களை தொற்றில் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வடமாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்குதல் நடக்கிறது.

இதை கண்டிக்கும் வகையில் இன்று இந்திய அளவில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின்போது, மருத்துவர்களை பாதுகாக்கும் மருந்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தேசிய அளவில் நடைமுறைபடுத்த வேண்டும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் சுகுமார் ,பொருளாளர் டாக்டர் சுதாகர் ,செயலாளர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு