/* */

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்

ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
X

ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, தலைமை அரசு மருத்துவமனை வளாகம், சூளை கொல்லம்பாளையம் உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பசியை போக்கி வந்தனர்.

கொரோனா பரவல் காலத்திலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் கூடுதலாக உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அம்மா உணவகங்களில் பழைய முறையில் கட்டணம் வசூலித்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 23 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்