Begin typing your search above and press return to search.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.45 லட்சம் வழக்குகள் பதிவு
ஈரோடு மாநகரில் இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.45 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாநகரில் இதுவரை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் மட்டும் வாகன விதிமுறையை மீறியதாக 66 ஆயிரத்து 519 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிமீறல் தொடர்பாக 78 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், 10 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.