Begin typing your search above and press return to search.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 59 வார்டுகளில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் 392 அரசியல் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநகராட்சியில் 434 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இணையங்களில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கும் பணி இன்று நடந்தது.
இதில் மாநகராட்சியை சேர்ந்த பணியாளர்கள் இயந்திரங்களை அந்தந்த பகுதிகளுக்கான மொபைல் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்னனுன்னி பார்வையிட்டார்.