/* */

அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்

கருங்கல்பாளையம் அழகு பட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அரிவாள் மீது நடந்து பூசாரி அருள்வாக்கு அளித்தார்.

HIGHLIGHTS

அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்
X

கருங்கல்பாளையம் பட்டுமாரியம்மன் கோவிலில், அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு அளித்த பூசாரி.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அழகு பட்டு மாரியம்மன் கோவில். இக்கோவில் 70 ஆண்டு கால வரலாற்று சிறப்புமிக்கது. இங்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக, கொரோனா விதிமுறைகள் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவை முன்னிடு, செங்குட்டுவன் நகர் மக்களால், கடந்த 4 ம் தேதி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, நேற்று கோவிலில் முக்கிய விழாவான தீர்த்தம் எடுத்தல், அலகு குத்தி நடனம் ஆடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா முடிவில், கோவிலின் தலைமை பூசாரி ஜோதிமணி அரிவாளுடன் நடந்தபடியே கோவிலை சுற்றி வந்தார். தொடர்ந்து வரிசையில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும்வெந்நீர் பானையின் மீது கால் ஊன்றி நடந்தும், அரிவாள் மீது நின்றும், அருள் வாக்கு அளித்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ஏராளமானோர், கோவில் முன்பாக குவிந்து, பூசாரி ஜோதிமணியிடம் அருள் வாக்கு பெற்று சென்றனர்.

Updated On: 7 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!