/* */

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: மரியாத்தை செலுத்திய மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம்
X
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கே.வி.ராமலிங்கம். 

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் காலையிலேயே அங்கு திரளாக கூடி இருந்தனர்.

கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் பன்னீர் செல்வம் பூங்கா வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கும், அந்த சிலைக்கு அருகே இருந்த ஜெயலலிதா சிலைக்கும் கே.வி. ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கூடி இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித்தலைவி வாழ்க என்று கோ‌ஷமிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு கே.வி. ராமலிங்கம் மற்றும் தென்னரசு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

Updated On: 17 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!