/* */

ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்
X

ஈரோடு மாநகர் பகுதியில், டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முதல் மாவட்டத்தில் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஈரோடு மாநகரில், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், சவிதா பஸ் நிறுத்தம், மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வகையில், ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 200 வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து ரூ.25 ஆயிரம் வசூலிக்கபட்டதாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறினார்.

Updated On: 7 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?