/* */

கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: முன்னேற்பாடுகள் தீவிரம்

கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: முன்னேற்பாடுகள் தீவிரம்
X

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில்.

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 4ம் தேதி பகல் பத்து உற்சவத்தின் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மாலை வரை பகல் பத்து உற்சவம் நடைபெறுகிறது. இன்று மாலை 5 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு அதிகாலை 3 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், சாமியார்கள் கொண்டு நடத்தப்படும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் பெருமாள் கோவில் சார்பாக செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிக அளவு வரும் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மூங்கிலால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை முதல் 23ம் தேதி வரை ராபத்து உற்சவம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. வரும் 23 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம், திருவாசல் சாற்று முறை நடைபெறுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் நிலை என வழிபாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.100-க்கும் மேற்பட்டபோலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

Updated On: 13 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...