Begin typing your search above and press return to search.
நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் படுகொலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நீடாமங்கலம் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நடேச.தமிழார்வன் நீடாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு அருகாமையில் 8 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக நீடாமங்கலத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.