/* */

பயிர்க்கடன், உரம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு

பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பயிர்க்கடன், உரம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு
X

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்கக்கோரி, ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்த பாரதிய ஜனதா கட்சியினர்.

ஈரோடு மாவட்டத்தில், 160க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பான்மையான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் உரம் கிடைக்கமால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜகவினர், கலெக்டரிடம் அனு அளித்தனர். அதில், அக்டோபர் 2021 முதல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதாக அறிவித்து இருந்தனர். இதை நம்பி இருந்த விவசாயிகளிடம், நில ஆவணங்களான பட்டா,சிட்டா மற்றும் கிராம நிர்வாகம் நடப்பு அடங்கல் வாங்கி வருமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுபோன்ற நடை முறை இல்லாத நிலையில், விவசாயிகளை வருவாய்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 29 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?