/* */

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் தடுமாறி விழுந்தவர் சாவு

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்தவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் மது போதையில் தடுமாறி விழுந்தவர் சாவு
X

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோயில் வீதியை அடுத்த பேச்சியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா.இவர் கண்ணையன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் நேற்றிரவு சிலருடன் மது அருந்தியுள்ளார்.இந்நிலையில் அதிகாலை அப்பகுதியில் உள்ள சாக்கடையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவரை மீட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு முதல் மது அருந்தி கொண்டிருந்ததாகவும் போதையில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் உண்மையான காரணம் முழுவிசாரணைக்கு பிறகுதான் தெரியவரும் என்றனர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் இதனால் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 5 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!