Begin typing your search above and press return to search.
ஆப்பக்கூடல் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
ஆப்பக்கூடல் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த, மூதாட்டி மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ரங்கம்மமாள் (வயது 75). கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ரங்கம்மாள் மனமுடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரங்கம்மாள் இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.