/* */

கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் காயம்

தாளவாடி கொங்கஹள்ளி கோவில் குண்டம் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பங்களாப்புதூர் தலைமை காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  தலைமை காவலர் காயம்
X

கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலரை நேரில் சென்று நலம் விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி கொங்கள்ளி மல்லிகார்ஜுனா கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பங்களாப்புதூர் தலைமை காவலர் பாலசுப்ரமணியம் மீது விழுந்தது.இதில் அவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாலசுப்ரமணியத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் சென்று மருத்துவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிகழ்வின் போது, கோபி டிஎஸ்பி ஆறுமுகம் மற்றும் கோபி இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 15 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது