/* */

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

புஞ்சை புளியம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாய் குறுக்கே சென்றதில் தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
X

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). மில் தொழிலாளி. இவருடைய நண்பர் செங்குந்த புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையத்துக்கு, உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றனர்.

துக்கம் விசாரித்து விட்டு திரும்பும் வழியில், புஞ்சைபுளியம்பட்டி அருகே கோப்பம்பாளையம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும், கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து, புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!