/* */

சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது
X

இன்று முழு ஊரடங்கையொட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள பால் மற்றும் மருந்துக்கடைகள் என அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து தேனீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிபர்களை கண்காணிக்க காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடவள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கோழி கறிகடையில் மதுவிற்பனை செய்யப்படுவதாக தகவல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கறிகடையில் பதுக்கி வைத்திருந்த

180 ML அளவு கொண்ட 240 மதுபாட்டில்கள், 375 ML கொண்ட 5 மதுபாட்டில்கள் என மொத்தம் 245 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசு மதுபானத்தை கள்ள தனமாக விற்பனைக்கு வைத்திருந்தாக சுந்தரா (55) என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். ஊரடங்கின் போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 April 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்