/* */

ஓடிய காரில் தீ விபத்து

திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஓடிய  காரில்  தீ விபத்து
X

திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்தவர் ஜாய்சன் கிருபாகரன் இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க காரில் மனைவியுடன் சென்றுவிட்டு தனது சொந்த ஊரான திருப்பூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பெட்ரோல் கசிவு காரணமாக கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. சுதாரித்துக்கொண்ட தம்பதியினர் காரை விட்டு கீழே இறங்கியுள்ளனர். கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியா தொடங்கியது. தீ எரிவதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரியும் காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதன்காரணமாக சத்தியமங்கலம் கோபி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 March 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...