/* */

சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை உயிரிழந்தது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் திம்பம் மலைப்பாதை, 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. இந்த மலைப்பாதையில், 24 மணி நேரமும் கார்,சரக்கு வாகனங்கள் என வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், திம்பம் பகுதியில், பலத்த காயங்களுடன் சாலையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்ப இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சாலையை கடக்கும் போது வாகனம் மோதி சிறுத்தை இருந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்து போன சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் என்றும், இது பெண் சிறுத்தை என்றும் சிறுத்தை மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 1 July 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...