/* */

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாக அலுவலகத்தில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு, உயிருடன் பிடிக்கப்பட்டு, மலைப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் புகுந்த 7 அடி நீள பாம்பு
X

பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிடிபட்ட பாம்பு.

ஈரோடு மாவட்டம் பவானியில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், இன்று மாலை, ஒரு பாம்பு ஊர்ந்து வந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதைக் கண்டு கூச்சலிட்டதால் பாம்பு, உள் அறையில் புகுந்து பதுங்கிக் கொண்டது. இதுகுறித்த தகவலின் பேரில், பவானி தீயணைப்புப் படையினர் விரைந்து பாம்பைப் பிடிக்க முயன்றனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், தீயணைப்புப் படையினர் பாம்பை உயிருடன் பிடித்து, பையில் போட்டு கட்டினர். பிடிபட்டது சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அடர்ந்த மலைப்பகுதியில் அந்த பாம்பு விடுவிக்கப்பட்டது. இதனால், கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 11 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?