/* */

பர்கூரில் கரடி தாக்கியதால் பாதிப்பு: ரூ.20 ஆயிரம் நிதி

அந்தியூர் அடுத்த பர்கூரில், கரடி தாக்கியதில் படுகாயமடைந்த விவசாயிக்கு, வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பர்கூரில் கரடி தாக்கியதால்  பாதிப்பு: ரூ.20 ஆயிரம் நிதி
X

நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம், ஈரையன் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பர்கூர் வனச்சரக்கத்துக்கு உட்பட்ட சோளகனை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈரையன் (வயது 50). இவர், கடந்த 6ஆம் தேதி மாலை, காப்பு காட்டிற்கு கால்நடைகளுக்கு தீவனம் கொண்டுவர சென்றபோது , கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார். தற்போது ஈரையன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். அவருக்கு, அரசின் நிவாரண தொகை வழங்க, வனத்துறை அலுவலர்கள், அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அதையடுத்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் கௌதம், உத்தரவின் பேரில் வனத்துறை சார்பில், முதற்கட்ட நிவாரண தொகையாக 20 ஆயிரம் ரூபாயை ஈரையன் குடும்பத்தாரிடம் வழங்கினார். அப்போது, பர்கூர் வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 17 March 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது