/* */

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால், ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

HIGHLIGHTS

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக, மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு செல்கிறது. இதன் காரணமாக, அணை கடந்த மாதம் 22-ந் தேதி தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது.

தொடர்ந்து அணையில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. 41 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால் 17.5 அடி உயரமுடைய கெட்டிசமுத்திரம் ஏரியில், தற்போது 9 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், 16 அடி உயரமுடைய அந்தியூர் பெரிய ஏரியில், தற்போது 6.5 அடிக்கு தண்ணீர் உள்ளது.

மேலும், பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரியும் நிரம்பியுள்ளது. தனது முழு கொள்ளளவான 11.25 அடியை எட்டியுள்ளது. இதே மழை தொடர்ந்து நீடித்தால், அந்தியூர் பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகள் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Updated On: 1 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு