/* */

நிரம்பி வழியும் வரட்டுப்பள்ளம் அணை: அணைக்கு செல்ல தடை விதிப்பு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், அணைக்கு செல்லும் நுழைவாயில் அடைப்பு.

HIGHLIGHTS

நிரம்பி வழியும் வரட்டுப்பள்ளம் அணை: அணைக்கு செல்ல தடை விதிப்பு
X

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணை 35.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைப்பகுதியில் தேக்கி வைக்கப்படும் நீரானது கோடை காலங்களில் வன விலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் ரம்மியமான அழகு காட்சிகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிலர் அணை பகுதிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி நீர் மட்டம் உயர்ந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதை யொட்டி பொதுமக்கள் அணை பகுதிக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. நுழைவு வாயில் கதவு அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்த ஒரு சிலர் ஏமாற்றம் அடைந்தனர். வரட்டுபள்ளம் அணைக்கு செல்ல கடந்த 4 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அணைக்கு பொது மக்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Updated On: 22 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...