/* */

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
X

அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய அரசு மற்றும் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழக உயர்வு கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி அந்தியூரில் தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் உலகி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தனர்.

இதில், கோபி கோட்டாட்சியர் திவ்யதர்ஷினி, அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார், கல்லூரி முதல்வர் சுமதி ,வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் நவமணி கந்தசாமி மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய கலை கல்லூரி திறப்பு காரணமாக ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா சிறப்பு புகைப்பட தொகுப்பு:-






Updated On: 7 July 2022 4:38 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!