/* */

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.4.46 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.4.46 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 4,070 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 14 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 34 பைசாவிற்கும், 7 மூட்டைகள் ஆமணக்கு ஒரு கிலோ 66 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 48 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 76 ரூபாய் 89 பைசா முதல் 89 ரூபாய் 09 பைசா வரையிலும், 30 மூட்டைகள் எள் ஒரு கிலோ 112 ரூபாய் 49 பைசாவிற்கும், 25 மூட்டைகள் மக்காச்சோளம் ஒரு கிலோ 22 ரூபாய் 27 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 85.21 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள், நான்கு லட்சத்து 45 ஆயிரத்து 771 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 2 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது