/* */

பவானிசாகர் அருகே வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

HIGHLIGHTS

பவானிசாகர் அருகே வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை
X

வனத்துறையினர் வாகனத்தை நோக்கி ஓடி வரும் காட்டு யானை.

ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.


இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் ரோட்டில் வனத்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுஜ்ஜல்குட்டை என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒற்றை ஆண் யானை வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி ஓடி வந்து தாக்க முயன்றது.


அப்போது, வனத்துறையினர் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி யானைக்கு பயத்தை ஏற்படுத்தினர். அந்த சப்தத்தைக் கேட்டு பயந்து யானை பின்னோக்கி நகர்ந்த படி சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து வாகனத்தில் முன்னேறிச் சென்றதால் பயந்த யானை அங்கிருந்து வனத்துக்குள் ஓடி மறைந்தது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 17 Sep 2023 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  3. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  4. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  5. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  8. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  9. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  10. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்