Begin typing your search above and press return to search.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்தில் தம்பதியர் பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் எருமைகுட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்.விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு, டி.என்.,பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில், பெருமாள், அவரது மனைவி கீதாவும், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடல்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 29) என்பவரை கைது செய்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.