Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் 42,363 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 42,363 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல், 15 - 18 வயதினருக்கு கோவாக்சின், 12 - 14 வயது சிறுவர்களுக்கு கோர்ப்வேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 33வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,597 மையங்களில் தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. இதில், 1,547 பேருக்கு முதல் டோஸ், 24,538 பேருக்கு இரண்டாம் டோஸ், 16,278 பேருக்கு பூஸ்டர் டோஸ் என மாவட்டத்தில் மொத்தமாக 42,363 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.