/* */

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு ஈரோட்டில் 2ம் கட்ட பயிற்சி

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு ஈரோட்டில் 2ம் கட்ட பயிற்சி
X

Erode news- பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை சிறப்பான முறையில் நடத்திட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில், தேர்தல் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது.

இப்பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 April 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா