Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 14 ஆயிரத்து 956 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 89.27 சதவீதமாகும். இதேப்போல், 2-ம் தடுப்பூசியை தவணை இதுவரை 12 லட்சத்து 07 ஆயிரத்து 202 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 66.73 சதவீதமாகும். மேலும், மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 22 ஆயிரத்து 158 பேர் செலுத்திக் கொண்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.