Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் வரும் 26 ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 26 ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் - 2021ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டஅரங்கில் 26.11.2021 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும், பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.