/* */

கவுந்தப்பாடி அருகே மரத்தின் மீது டூவீலர் மோதி இரண்டு வாலிபர்கள் பலி

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ரோட்டோர மரத்தின் மீது டூவீலர் மோதி இரண்டு வாலிபர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே மரத்தின் மீது டூவீலர் மோதி இரண்டு வாலிபர்கள் பலி
X

விபத்தில் உயிரிழந்த கார்த்திக் , சங்கர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (22), சங்கர் (23). இவர்கள் இரண்டு பேரும் இன்று அதிகாலை, கவுந்தப்பாடியில் இருந்து நம்பியூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில், கண்ணாடிப்புதூர் அருகே உள்ள வளைவில் திரும்பினர்.

அப்போது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், சங்கர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கவுந்தப்பாடி போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 24 Sep 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...