Begin typing your search above and press return to search.
கவுந்தப்பாடி அருகே மரத்தின் மீது டூவீலர் மோதி இரண்டு வாலிபர்கள் பலி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ரோட்டோர மரத்தின் மீது டூவீலர் மோதி இரண்டு வாலிபர்கள், பரிதாபமாக உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (22), சங்கர் (23). இவர்கள் இரண்டு பேரும் இன்று அதிகாலை, கவுந்தப்பாடியில் இருந்து நம்பியூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில், கண்ணாடிப்புதூர் அருகே உள்ள வளைவில் திரும்பினர்.
அப்போது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், சங்கர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கவுந்தப்பாடி போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.