/* */

அந்தியூரில் செல்போன் கடையில் செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்

அந்தியூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள இயர் போன்களை திருடிய 2 சிறுவர்கள் சிக்கினர்.

HIGHLIGHTS

அந்தியூரில் செல்போன் கடையில் செல்போன்களை திருடிய 2 சிறுவர்கள்
X

அந்தியூர் காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (32) என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி செல்போன் கடையின் பூட்டை உடைத்து, 3 செல்போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயர் போன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ் என்பவரின் கடையில் செல்போன்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 24 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  2. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  3. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  4. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  8. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  9. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு