/* */

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்

பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் முழுநீள கரும்பு வழங்கப்படும்
X

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில்  ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை மளிகை தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியன வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 288 பகுதி நேரக்கடைகள் ஆக மொத்தம் 1,035 நியாயவிலைக்கடைகளில் உள்ளது. இதில் 6,64,970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- 2022 வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுளள அரிசி பருப்பு நெய் உள்ளிட்ட பொருள்களை தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உடனிருந்தனர்.

Updated On: 25 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?