/* */

பாதுகாப்பில் குளறுபடி என்று கூறி நாடகமாடிய பிரதமர்மோடியை கண்டித்து மனிதசங்கிலி

திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மாவட்ட மாநகர் காங்கிரஸ் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பாதுகாப்பில் குளறுபடி  என்று கூறி நாடகமாடிய பிரதமர்மோடியை கண்டித்து மனிதசங்கிலி
X

 பிரதமர் மோடியை கண்டித்து திண்டுக்கல்லில்  மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது என்று கூறி நாடகமாடிய பிரதமர் மோடியை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸார் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரன்ஜித் சிங் சன்னி முதல்வராக உள்ளார். கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தபொழுது பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை குறை கூறிவிட்டு திரும்பிச் சென்றார்.

இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இந்தியா முழுவதும் பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மாவட்ட மாநகர் காங்கிரஸ் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி நாடகம் நடத்திய மோடியை கண்டித்து மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிள் முகமது சித்திக், வேங்கை ராஜா, வரதராஜன் உள்ளிட்ட பல காங்கிரஸ் உறுப்பினர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 13 Jan 2022 11:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை