Begin typing your search above and press return to search.
திண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்
இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் மத போதகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார்.
HIGHLIGHTS
பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் வினோத், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். எனவே மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மத போதகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது மண்டல தலைவர் ரமேஷ், வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சதீஷ், இளைஞரணி தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.