/* */

போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்

தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

HIGHLIGHTS

போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்
X

போக்சோவில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதில் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர்.

பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் காவல்துறையினர் மற்றும் பென்னாகரம் மகளிர் காவல்துறையினர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவரே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated On: 9 Dec 2023 2:51 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...