/* */

பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த, 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அரசு பள்ளியில் படித்த 14 முன்னாள் மாணவர்கள் போலீசாக தேர்வு
X

பாலக்கோடு அரசு பள்ளியில் படித்து போலீசாக தேர்வு பெற்றுள்ள , முன்னாள் மாணவர்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2016முதல் 2019ம் ஆண்டு வரை படித்த மாணவர்களில் 14 மாணவர்கள் இந்த வருடம் விளையாட்டு துறை மூலம் போலீஸ் துறைக்கு தேர்வாகி சென்ற வாரம் போலீசாக பணி ஆணையை பெற்றனர்.

இவர்களின் சாதனையை பாராட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளியால் மாணவர்கள் பெருமையடைவதைப் போல் இந்த மாணவர்களால் பள்ளி பெருமை அடைவதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு முன்னேற்றங்களை பெற்று பணியில் சிறக்க வாழ்த்தினார்.

இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டி வெற்றி பெற செய்த தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், தட்சிணாமூர்த்தி, அறிவழகன் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...