/* */

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அரூர் அருகே பழைய சாலையை அகற்றாமல் அதன்மேல் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணி நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பழைய சாலையின் மீது புதிய சாலைஅமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
X

அரூர் அருகே பழைய சாலை மேல் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தர்மபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தானிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

113 கிலோ மீட்டர் தூரம் உள்ள தர்மபுரி-திருவண்ணாமலை சாலையில், தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக ஏற்கெனவே தர்மபுரி,கோபிநாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இச்சாலையில் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது.

நான்கு வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் தார் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலையை தரமான சாலையாக இல்லாமல் சாலை சேதமடையும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் அரூர் அருகே உள்ள சேவா கிராம பகுதியில் பழைய சாலையை அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பழைய தார் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்து வந்த அரூர் வட்டாட்சியர் பெருமாள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். மேலும் பழைய சாலையின்மீது புதிய சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Updated On: 15 Oct 2023 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’