/* */

அரூர் வருவாய் கோட்டத்தில் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்

அரூர் வருவாய் கோட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு பட்டா திருத்த முகாம் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

அரூர் வருவாய் கோட்டத்தில் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்
X

வருவாய்த்துறை சார்பில், விவசாயிகள், நில உரிமையாளர்கள் தங்களின் பட்டா, சிட்டாவில் பிழை திருத்தம் செய்தல், நிலப்பிரச்னை தொடர்பாக, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாமில், உரிய ஆவணங்களை வழங்கி, கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

அதன்படி இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி) வேடகட்டமடுவு, ஜம்மனஹள்ளி, டிசம்பர் 10 ஆம் தேதி சந்தப்பட்டி, பட்டுகோணம்பட்டி, 15 ஆம் தேதி கே.வேட்ரப்பட்டி, பி.மல்லாபுரம், டிச. 17 ஆம் தேதி பையர்நாய்க்கன்பட்டி, போசிநாய்க்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்களாக அரூர் கோட்டாட்சியர் வே.முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) ஆ.தணிகாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...