/* */

தருமபுரி அருகே வாகன சோதனையில் ரூ.9.70 லட்சம் பறிமுதல்.!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலை கடகத்தூர் அரசு ஐடிஐ அருகில் நடந்த பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ 9 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தருமபுரி அருகே வாகன சோதனையில் ரூ.9.70 லட்சம் பறிமுதல்.!
X

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலை, கடகத்தூர் அரசு ஐடிஐ அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பாலக்கோடு அருகே தனியார் பால் பண்ணை ஊழியர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.9.70 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்த பணத்தை தருமபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதாப்பிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். இதே போன்று தருமபுரி மாவட்டம் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 March 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா