தொப்பூர் கணவாயில் லாரிகள் கவிழ்ந்து விபத்து: 2 ஓட்டுநர்கள் காயம்
தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் லாரி கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜி வயது 25.லாரி டிரைவர். இவர் மத்திய பிரதேசத்தில் இருந்து காங்கேயத்திற்க்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். மாற்று டிரைவராக தனவேல் வயது 25. எபவர் வந்துகொண்டிருந்தார்.
இவர்கள் பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் நேற்று இரவு வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடம் வந்த தொப்பூர் போலீசார் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதேபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் கொச்சினுக்கு இரும்பு தகரம் ரோல் பேர்ல் ஏற்றி வந்த டிரைலர் தொப்பூர் கணவாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பீகாரை சேர்ந்த பப்லுகுமார் சிங் வயது 30.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.