/* */

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை நவ. 31-க்குள் பெறலாம்

தர்மபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நவ. 31 ந்தேதிக்குள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் +2 தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நவம்பர் 31 ந்தேதிக்குள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தின்படி, மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான மேல்நிலைத் தேர்வுகளின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மேற்காணும் பருவங்களில் தேர்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு / தற்காலிக மதிப்பெண் பட்டியல்) 30.11.2021 ஆம் தேதிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டும் கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி 636 705. தொலைபேசி - 04342 233812. இவ்வாறு தருமபுரி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கோ. காவேரி தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 6:43 AM GMT

Related News