Begin typing your search above and press return to search.
தர்மபுரி: மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
தர்மபுரி அருகே ராஜாப்பேட்டை கான் காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 40.மினிலாரி டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவரது மனைவி கார்த்திகா, கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை சீனிவாசன், குடும்பம் நடத்த அழைத்து உள்ளார்.
ஆனால், கார்த்திகா வர மறுக்கவே வீட்டில் தூக்கு போட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.