Begin typing your search above and press return to search.
கொரோனாவால் இறந்த போலீசின் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியில், கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த விஜயகுமார் என்ற போலீஸ்காரர், கடந்த மே மாதம் 22-ம் தேதி கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.
அவருடன் 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரூ.22 லட்சத்து 58 ஆயிரத்து156 நிதி திரட்டி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த விஜயகுமார் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தொகையை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மூலம், விஜயகுமாரின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் அண்ணாமலை மற்றும் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.