தர்மபுரி அருகே கள்ளக்காதலால் விபரீதம்: பெண் கொலை, தொழிலாளி கைது
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகைககளை பறித்துக் கொண்டு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரவி இவரது மனைவி மனைவி தேன்மொழி (34) இவருக்கும் பாகல்பட்டியை சேர்ந்த அசோகன்(30) கூலி தொழிலாளிக்கும், தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் போது இருவருக்குள்ளும் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 24 ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தேன்மொழி, 26ம் தேதி ஐயப்பன் கரடு என்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாயிருந்தது. இது தொடர்பான விசாரணையில், தேன்மொழியை திட்டமிட்டு கொலை செய்தது அசோகன் தான் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அசோகனை கைது செய்து தங்க நகைகளை அதியமான் கோட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையாளி அசோகனுக்கு திருமாணமாகததும், தனியார் கம்பெனியில் வேலை பாரத்த நேரம் போக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், அதகளவு கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த நிலையி்ல் ஏற்கனவே திருமணாகி மூன்று குழந்தைகள் உள்ள தேன்மொழியை, தன் வசப்படுத்தி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரிக்க திட்டமிட்டு திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதில் தேன்மொழி மயங்கியதும், நகைககளை பறித்துக் கொண்டு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அதியமான் கோட்டை போலீசார் அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.