/* */

தர்மபுரி எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டுமானப் பணிகளை காவல் தலைமை இயக்குநர் ஆய்வு

தர்மபுரி எஸ்.பி.அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை காவல் தலைமை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தர்மபுரி எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டுமானப் பணிகளை காவல் தலைமை இயக்குநர் ஆய்வு
X

தர்மபுரியில் 75.40 கோடியில் கட்டப்படும் எஸ்பி அலுவலகத்துக்கான கூடுதல் கட்டிடத்தை, டிஜிபி ஏகே விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் எஸ்பி கலைச்செல்வன் உள்ளார்.

தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் பின் புறம், ரூ.5.40 கோடியில் புதிதாக கூடுதல் கட்டிட கட்டுமான பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று, தர்மபுரிக்கு வந்த காவலர் வீட்டு வசதி கழக தலைவரும், காவல் துறை டிஜிபியுமான ஏ.கே. விஸ்வநாதன், எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு அறையாக சென்று, கட்டுமான விவரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காரிமங்க லம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு குடியிருப்புகள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த. ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 18 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...