/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தர்மபுரி மாவட்டத்தில் 872 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்ற இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 3900 பேர் இந்த முகாம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற 872 சிறப்பு முகாம்களில் மொத்தம் 43526 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கையும் தாண்டி மொத்தம் 49136 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அனைவரும் இந்த முகாமை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 210 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் காலை தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இதனிடையே தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி அதியமான் கோட்டை, ஏலகிரி மற்றும் அரூர் பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, மணிவண்ணன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது