/* */

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட மன்ற குழுவுக்கு மனுக்கள் அனுப்பலாம்:கலெக்டர்தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட மன்ற குழுவுக்கு பொதுமக்கள் மனுக்கள் அனுப்பலாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட மன்ற குழுவுக்கு மனுக்கள் அனுப்பலாம்:கலெக்டர்தகவல்
X

தருமபுரி  மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி

தர்மபுரி மாவட்டத்தில் சட்ட மன்ற குழுவுக்கு மனுக்கள் அனுப்பலாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2022-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளதையொட்டி, தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் / குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர் / மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு

தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு 10.05.2022 செவ்வாய்க்கிழமைக்குள் அனுப்பலாம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2022-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் / குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர் / மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு 2022-ஆம் ஆண்டு மே திங்கள் 10-ஆம் தேதிக்குள் (10.05.2022-செவ்வாய்க்கிழமைக்குள்) அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்க்கண்டவைகளாக இருத்தல் கூடாது :

1. தனிநபர் குறை

2. நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள்

3. வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச

உதவிகள் வேண்டுதல்

4. வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல்

5.அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை

வெளிப்படுத்துதல்.

சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வமயம், மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 10.05.2022-க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்